டெல்லியில், அபாய கட்டத்தை எட்டியுள்ள காற்றுமாசு - உடல்நலத்துக்கு கடும் தீங்கு விளைவிப்பதால், பொதுமக்கள் பெரும் அச்சம்
Nov 14 2019 8:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் காற்றுமாசின் அளவு அபாய கட்டத்தை எட்டியுள்ளதால், பொதுமக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக காற்றுமாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த 4-ம் தேதி டெல்லியில் வாகன கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனால், அடுத்த சில நாட்களுக்கு காற்று மாசு சற்றே குறைந்திருந்தது. இந்த நிலையில், மீண்டும் காற்றுமாசு அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி டெல்லியில் காற்றுத் தரக்குறியீட்டு எண் பி.எம் 2.5 மற்றும் பி.எம் 10 இரண்டுமே 500-ஐ எட்டியது. பி.எம் 2.5 வழக்கமாக 60 என்ற நிலையில் இருப்பதே மனிதர்களின் உடல்நலத்திற்கு ஏற்றது. ஆனால், தற்போது 500-ஐ எட்டியதால், உடல்நலத்துக்கு கடும் தீங்கானது என மருத்துவ வட்டரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாகவே டெல்லியில் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வருகிறது.