ரஃபேல் வழக்கின் தீர்ப்பு குறித்த ராகுல்காந்தியின் கருத்துக்கு கண்டனம் - மேற்குவங்கம் மற்றும் டெல்லியில் பா.ஜ.க தொண்டர்கள் போராட்டம்

Nov 16 2019 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -

ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டிய, ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி, நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரஃபேல் ஒப்பந்தத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை எனக்கூறி, சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

இதனால், ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மன்னிப்புக்கோர வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பேனர்களை கிழித்து, தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். அதேபோல், டெல்லியில் உள்ள ஆம்ஆத்மி அலுவலகத்தை முற்றுகையிட்டு பாஜக தொண்டனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00