பணியை ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு
Dec 7 2019 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பணியை ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
20 ஆண்டுகள் பணியாற்றி, தனது பதவியை ராஜினாமா செய்த ஊழியர் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து யமுனா பவர் லிமிட்டட் நிறுவனம், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. விருப்ப ஓய்வும், ராஜினாமாவும் வெவ்வேறு எனக்கூறிய நீதிபதிகள், பதவியை ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் பெறும் தகுதி இல்லை என்று தெரிவித்தனர். 2003-ம் ஆண்டு டிசம்பருக்கு முன்பு பணியமர்த்தப்பட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்றும் கூறினர்.