குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்த முடியாது என மறுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் கிடையாது - உள்துறை அமைச்சகம் தகவல்
Dec 13 2019 6:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்த முடியாது என மறுப்பதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவு கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நேற்று முன்தினம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இச்சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேற்குவங்கம், கேரளா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநில அரசுகள், இம்மசோதாவை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், மாநில அரசுகளுக்கு மறுப்பு தெரிவிக்க அதிகாரம் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களும் இந்த மசோதாவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.