சர்வதேச அளவில் பரவும் தீவிரவாதத்தின் காலடி பாகிஸ்தான் வழியாகவே செல்கிறது - ஐ.நா. சபையில் இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு
Dec 14 2019 12:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சர்வதேச தீவிரவாதத்தின் காலடி ஒவ்வொன்றும், பாகிஸ்தானின் வழியாகவே செல்கிறது என, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா. பொதுச்சபையில், ஐ.நாவுக்கான இந்திய தூதுக்குழுவின் நிரந்தர முதன்மை செயலர் பவுலோமி திரிபாதி, பாகிஸ்தானின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசும்போது, அரசியலமைப்புச் சட்டம் 370-வது பிரிவு ரத்து, தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து, பாகிஸ்தான் பிரதிநிதி பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் பேச்சு, கோழிக்கூட்டுக்கு காவல் இருக்கும் நரியைப் போன்றது என்றும், பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் திகழ்கிறது என்றும் சாடினார். இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்த பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் புவுலோமி தெரிவித்தார்.