தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பம் - மத்திய அரசு வரவேற்பு
Dec 14 2019 1:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய தலைமை தகவல் ஆணையர் மற்றும் 4 தகவல் ஆணையர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்றுள்ளது.
மத்திய தலைமை தகவல் ஆணையர் சுதிர் பார்கவாவின் பதவிக் காலம் வரும் ஜனவரி 11-ம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, தலைமை தகவல் ஆணையர் மற்றும் காலியாக உள்ள 4 தகவல் ஆணையர் பணியிடங்களையும் நிரப்ப மத்திய பணியாளர் அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சட்டம், அறிவியல் தொழில்நுட்பம், சமூகசேவை, நிர்வாகம், ஊடகவியல் தொடர்பான துறைகளில் அறிவு பெற்றவர்களாகவும், 65 வயதை எட்டாதவர்களாகவும், எம்.பி. - எம்.எல்.ஏ. அல்லாதவர்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான ஊதியம், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் குறிப்பிட்டபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.