மஹாராஷ்ட்ரா தலைமை செயலக கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை முயற்சி - 3-வது மாடியிலிருந்து குதித்த பெண் பத்திரமாக மீட்பு
Dec 14 2019 4:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ரா தலைமை செயலக கட்டடத்தின் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்மணி, பத்திரமாக காப்பாற்றப்பட்டார்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் தலைமை செயலக கட்டடம் அருகே, பழச்சாறு விற்பனை செய்துவந்த பிரியங்கா குப்தா என்ற பெண்ணும், அவரது கணவரும், போலீசாரால் கடுமையாக தாக்கப்பட்டதுடன், அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு நீதி கேட்கும் விதமாக, தலைமை செயலகம் வந்த பிரியங்கா குப்தா, அலுவலகத்தின் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். ஆனால் வளாகத்தை சுற்றிலும் கட்டப்பட்டிருந்த வலையில் அவர் விழுந்ததால் பத்திரமாக மீட்கப்பட்டார். ஏற்கெனவே ஒரு நபர், மஹாராஷ்ட்ரா தலைமை செயலக கட்டடத்திலிருந்து இதேபோல் கீழே குதித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.