உன்னாவ் கொடூரத்தின் தாக்கம் அடங்குவதற்குள் உத்தரபிரதேசத்தில் மற்றொரு பெண் பாலியல் வன்கொடுமை - மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்‍கப்பட்டதால் பரபரப்பு

Dec 15 2019 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் நகரில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, இளம்பெண் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அடங்குவதற்குள், அதேபோல் மற்றொரு சம்பவம் அங்கு நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை​ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம், உன்னாவ் நகரில், கடந்தாண்டு ஐந்து பேர் கொண்ட கும்பல், இளம்பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்தது. இது குறித்து புகாரளித்த அந்த பெண் மீது, குற்றவாளிகள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம், நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை எழுப்பியது.

இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், உன்னாவ் நகர் அருகே, பதேபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், இதே போல் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. வீட்டில் தனியாக இருந்த 18 வயதாகும் இளம்பெண்ணை, அவரது உறவினர் பாலியல் வன்கொடுமை செய்து, மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் ‍சேர்த்தனர். பாதிக்கப்பட்ட பெண், 90 சதவீத தீக்காயங்களுடன் கான்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றவாளியை தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00