நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை நிறைவேற்ற தயார் - துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், மத்திய அரசுக்கு எழுதிய ரத்தக் கடிதத்தால் பரபரப்பு
Dec 15 2019 4:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நிர்பயா பாலியல் வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு விருப்பம் தெரிவித்து, சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், மத்திய அரசுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா, கடந்த 2012 டிசம்பரில், கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி, மருத்துவமனையில் இறந்தார். இந்த வழக்கில், அக் ஷய், முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோருக்கு, 2017ல், துாக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் எந்த நேரத்திலும் துாக்கிலிடப்படலாம் என்ற நிலையில், சர்வதேச துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், மத்திய அரசுக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பெண் ஒருவராலேயே குற்றவாளிகள் நான்குபேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், தனது கோரிக்கைக்கு பெண் எம்.பிக்களும், நடிகைகளும் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.