குடியுரிமை சட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தங்கள் கொண்டுவரத் தயார் - தேர்தல் பிரச்சாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச்சு
Dec 15 2019 6:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை சட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தங்கள் கொண்டுவர தயார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறியதையடுத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு ஒப்புதல் அளித்தார். இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, மேகாலய முதலமைச்சர் கான்ராட் சங்மா மற்றும் மாநில அமைச்சர்கள் தன்னை சந்தித்து போராட்டத்தின் தீவிரம் குறித்து எடுத்துரைத்ததாக கூறினார். சில திருத்தங்கள் கொண்டுவர அவர்கள் வலியுறுத்தியதாகவும் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு பின்னர் தன்னை சந்திக்குமாறு அவர்களிடம் தெரிவித்ததாக குறிப்பிட்ட அமித் ஷா, இந்த விவகாரம் தொடர்பாக ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.