விழுப்புரம் அருகே 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2,000 லிட்டரில் பாலபிஷேகம் : ஆஞ்சநேயருக்கு சாற்றப்பட்ட 130 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலை
Jan 11 2024 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடியில் உள்ள 36 அடி உயர விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டரில் விசேஷ பாலபிஷேகம் நடைபெற்றது. காலை 8.30 மணி முதல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதில் மூலவருக்கு 2 ஆயிரம் லிட்டரில் பால் மற்றும் பன்னீர் திரவியங்களுடன் கூடிய சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மேலும் மகா யாகசாலையில் சிறப்பு பூஜை செய்யபட்டு 130 கிலோ எடை கொண்ட ஏலக்காய் மாலையை ஆஞ்சநேயர் சிலைக்கு சாற்றினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.