திருநெல்வேலியில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில், ஐப்பசி திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Oct 10 2014 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற கோயிலான திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் ஆலயத்தில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஐப்பசி திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முக்கிய நிகழ்ச்சியாக வரும் 20-ம் தேதி காந்திமதி அம்மன் தங்க சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வரும் 21-ம் தேதி திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.