மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்காக, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில், இந்தியா முழுவதும் உள்ள 66 மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது
Nov 1 2014 7:41AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்காக, இந்தியா முழுவதும் உள்ள பிரசித்திப் பெற்ற 66 மசூதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற பீமா பள்ளி தர்ஹாவில் நடைபெற்ற தொழுகையில், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கஸ்மூர் கிராமத்தில் உள்ள பழைமை வாய்ந்த தர்ஹாவில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் உள்ள 500 ஆண்டு பழைமை வாய்ந்த தர்ஹாவில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கத் தேர் இழுத்து வழிபட்டனர்.
நெல்லை மாவட்டத்தில், பண்பொழியில் உள்ள திருமலைகுமாரசுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அமைச்சர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து தங்கத் தேர் இழுத்தும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
காஞ்சிபுரம் மத்திய மாவட்டக் கழகம் சார்பில் திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலில் 108 லிட்டர் பால் அபிஷேகமும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று, தங்கத் தேர் இழுத்து வழிபட்டனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள சக்தி விநாயகர் கோயிலில் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் சிறப்பு ஆராதனை மற்றும் 108 தேங்காய் உடைத்து வழிபாடும் நடைபெற்றது. கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.