திருவண்ணாமலையில் ஆனி பிரம்மோற்சவ திருவிழா தீர்த்தவாரி - திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்
Jul 17 2014 11:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலையில் ஆனி பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் உள்ள உலக பிரசித்திப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அருணாசலேசுவரர் திருக்கோயிலில், ஆனி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீசந்திரசேகரர், 4 மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியித்து, கிழக்கு வாசல் எதிரே உள்ள அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா, வடமலையில் 50 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ சேவுகராயர் அய்யனார் திருக்கோயிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கீழ்வேளுரை அடுத்த நாகலூரில் பழமையான நாகநாத சுவாமி ஆலயத்தில், 62 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜீரனோதாரன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட புனித நீரால், கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரியில் பிரசித்திப்பெற்ற உலக முத்துமாரியம்மன் கோயிலின் திருப்பணிகள் முடிவடைந்து, கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோயில் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.