புரட்டாசி மாதத்தையொட்டி பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகளில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
Sep 27 2014 4:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்டாசி மாத 2-ம் சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு ஆராதனைகளில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாத 2-ம் சனிக்கிழமையான இன்று, மாநிலம் முழுவதிலுமுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் உள்ள வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. மூலவர் சுவாமி குருவாயூரப்பன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உள்ளூர் மட்டுமின்றி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல், வேலூரில் உள்ள பிரபல ஜலகண்டேஸ்வரர் ஆலயத்தில், தனி சன்னதியில் அருள்பாளித்து வரும் ஸ்ரீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.