மக்களின் முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் அரியணை ஏற வேண்டி, தமிழகத்தின் பல்வேறு திருக்கோவில்களில் தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் : அ.இ.அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்பு
Nov 5 2014 10:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களின் முதல்வரும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான செல்வி ஜெயலலிதா, முதலமைச்சராக மீண்டும் அரியணை ஏற வேண்டி, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.
விழுப்புரம் மாவட்டம் சிறுவந்தாடு காளிகாம்பாள் கோயிலில், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க வேண்டி, அ.இ.அ.தி.மு.க.வினர் அம்மனுக்கு 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை புறநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டி, பாபநாசம் உலகாம்பிகை கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், அமைச்சர் திரு.செந்தூர் பாண்டியன், வீட்டு வசதி வாரியத்தலைவர் திரு.ஆர்.முருகையாபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் மற்றும் அ.இ.அ.தி.மு.க.வினரும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.
கடலூர் மேற்கு மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மக்களின் முதல்வர் செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க வேண்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பச்சையப்பன் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.