உலக புகழ்பெற்ற நாகூர் தர்ஹா கந்தூரி விழா : வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கும் தர்ஹா - விழாவை காண குவியும் பொதுமக்கள்
Jan 23 2020 10:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக புகழ்பெற்ற நாகூர் தர்ஹா கந்தூரி விழா தொடங்க இருப்பதை முன்னிட்டு, வண்ண மின்விளக்குகளால் அலங்கரித்து ஜொலிக்கும் தர்ஹாவை, பொதுமக்கள் கண்டு கண்டு ரசித்து செல்கின்றனர்.
உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 463ஆம் ஆண்டு கந்தூரி விழா வரும் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. கந்தூரி விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தர உள்ளனர். இந்நிலையில், நாகூர் தர்ஹா புதிய வர்ணம் பூசப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது. அலங்கார வாசல், கால்மாட்டு பகுதி, பெரிய மினாரா உள்ளிட்ட 5 மினாராக்களும் வண்ண விளக்குகளால் ஜொலிக்கின்றன. கந்தூரி விழாவிற்கு கலந்துகொள்ள நாகூர் தர்ஹா வருகை தந்துள்ள பக்தர்கள், வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் மினாரக்களில் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர். நாகூர் தர்கா விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டு வருகிறது.