கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழா - தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
Jan 24 2020 7:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கோணான்குப்பம் பெரிய நாயகி அன்னை திருத்தல ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு, தேர்ப்பவனி நடைபெற்றது. புனித பெரியநாயகி அன்னை திருத்தலத்தில் கொடியேற்றம் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. ஆடம்பரக் கூட்டுத் திருப்பலியைத் தொடர்ந்து, தேர்ப்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அன்னை பெரியநாயகி எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் மாதாவின் பாடல்களைப் பாடினர். புதுச்சேரி - கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் இவ்விழாவில் கலந்துகொண்டார்.