சபரிமலை உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும், பெண்களின் சுதந்திரம் குறித்த வழக்கு - உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது விசாரணை
Feb 17 2020 1:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சபரிமலை உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும், பெண்களின் சுதந்திரம் குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, வழக்கை, 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு, கடந்த நவம்பர் மாதம் மாற்றியது.
இதையடுத்து, சபரிமலை மட்டுமன்றி, அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும், பெண்களின் அனுமதி குறித்து விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு அறிவித்தது. மேலும், இன்று முதல் தினந்தோறும் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சபரிமலை உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும், பெண்களின் சுதந்திரம் குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.