சபரிமலை உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும், பெண்களின் சுதந்திரம் குறித்த வழக்கு - உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது விசாரணை

Feb 17 2020 1:06PM
எழுத்தின் அளவு: அ + அ -

சபரிமலை உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும், பெண்களின் சுதந்திரம் குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்‍கலாம் என கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி, 50-க்‍கும் மேற்பட்ட மனுக்‍கள் உச்சநீதிமன்றத்தில் தாக்‍கல் செய்யப்பட்டன. மனுக்‍களை விசாரித்த 5 நீதிபதிகள் அமர்வு, வழக்‍கை, 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்‍கு, கடந்த நவம்பர் மாதம் மாற்றியது.

இதையடுத்து, சபரிமலை மட்டுமன்றி, அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும், பெண்களின் அனுமதி குறித்து விசாரிக்‍கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு அறிவித்தது. மேலும், இன்று முதல் தினந்தோறும் விசாரணை நடைபெறும் என தெரிவிக்‍கப்பட்டிருந்தது. அதன்படி, சபரிமலை உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும், பெண்களின் சுதந்திரம் குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00