திருச்செந்தூர் ஆலயத்தில் சந்தனம் ரூ.1-க்கு விற்பனை செய்வதை உறுதிப்படுத்தக் கோரி வழக்கு : இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
Feb 25 2020 9:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆலயத்தில்,
சந்தனம் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வதை உறுதிபடுத்தக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில், ஏல நிபந்தனைகளை மீறி சந்தனம் கூடுதலான விலைக்கு விற்பனை செய்யப்படுவது தொடர்பாக, வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.