ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா - ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
Mar 11 2020 4:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு கள்ளுக்கடைமேடு கொண்டத்து பத்ரகாளியம்மன் கோவில் மாசி மாத தீமிதி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மூலவர் பத்ரகாளியம்மன் வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் அடுக்கப்பட்டு சிறப்புப் பூஜைகளுடன் தீயேற்றி வைக்கப்பட்டது. கோவிலின் தலைமைப் பூசாரி முதலாவதாக குண்டத்தில் இறங்க, அவரைத் தொடர்ந்து காப்புக் கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.