வேளாங்கண்ணியில் தவக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலுவைப் பாதை ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்பு
Mar 14 2020 3:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாங்கண்ணியில் தவக்காலத்தை முன்னிட்டு நடைபெற்ற சிலுவைப் பாதை ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப்புகழ் பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு 3-வது வார சிலுவைப் பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வண்ணம், சிலுவையை கையில் ஏந்தி வழிபாடு நடத்தப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த பக்தர்கள் உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.