கொரோனா வைரஸ் எதிரொலி : திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே சுவாமி தரிசனத்திற்கு அனுமதி
Mar 17 2020 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் எதிரொலியாக, திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள் பரிசோதனை செய்யப்பட்ட பிறகே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோயிலில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சளி, காய்ச்சல், இருமல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படிப்பாதை, வின்ச் மற்றும் ரோப்கார் நிலையங்களில் மலையேறும் பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு பரிசோதிக்கப்பட்ட பின்னரே மலையேற அனுமதிக்கப்படுகின்றனர். கைகளை கழுவ கிருமி நாசினியும் வழங்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் உத்தரவின்பேரில், மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் பரிசோதனை முகாம் அமைத்துள்ளனர். பக்தர்களுக்கு வைரஸ் விழிப்புணர்வு குறித்த பிரசுரங்கள் வழங்கப்பட்டன.