காரைக்காலில் பக்தர்களின்றி நடைபெற்ற பிச்சாண்டவர் மூர்த்தி வெள்ளை சாத்து புறப்பாடு நிகழ்ச்சி
Jul 3 2020 5:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காரைக்காலில், புகழ்பெற்ற மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிச்சாண்டவர் மூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடு, பக்தர்கள் இன்றி எளிய முறையில் நடைபெற்றது. காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி, நேற்று காலை, காரைக்கால் அம்மையார் - பரமத்தி செட்டியாருக்கு திருக்கல்யாணமும், அதைத்தொடர்ந்து மாலையில் ஸ்ரீபிச்சாண்டவர் மூர்த்தி, வெள்ளை நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கையிலாசநாதர் ஆலய பிரகாரத்தை வலம் வந்தார். ஊரடங்கால், பக்தர்கள் தங்கள் வீடுகளிலிருந்தபடியே, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இணையதளத்தின் மூலம் கண்டு களித்தனர்.