லாப நோக்கம் கிடையாது, பக்தர்களின் சுவாமி தரிசனமே முக்கியம் - திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்
Jul 5 2020 11:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் சுவாமி தரிசனமே முக்கியம், லாப நோக்கம் கிடையாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய அறங்காவலர் குழு தலைவர் திரு.சுப்பா ரெட்டி, கடந்த 8 ம் தேதி முதல் பக்தர்கள் மீண்டும் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், தினமும் 12 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வருகின்றனர் என்றும் கூறினார். இன்று வரை பக்தர்களில் ஒருவருக்கு கூட கொரோனா இல்லை என்று கூறிய அவர், அர்ச்சகர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் மூலம் பக்தர்களுக்கு பரவவில்லை என்றும் தெரிவித்தார்.