திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகரிக்கும் கொரோனா : பாதுகாப்பு காவலர்கள் உள்பட 80 பணியாளர்களுக்கு தொற்று
Jul 9 2020 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் உள்பட 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் 3 மாதங்களுக்கும்மேல் மூடப்பட்டிருந்த திருப்பதி ஏழுமலையான் கோயில் கடந்த மாதம் 8ம் தேதி திறக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், திருப்பதி கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர், வாத்தியக்காரர்கள், பாதுகாவலர்கள் என 80 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.