திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 22 டன் தலைமுடி ரூ.37 கோடிக்கு ஏலம்
Jul 13 2020 12:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 22 டன் தலைமுடி 37 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டும் கோயில் என்ற சிறப்பை பெற்றது திருப்பதி ஏழுமலையான் கோயில். இங்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் முடி காணிக்கை செலுத்தவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனால் அங்கு டன் கணக்கில் சேரும் தலைமுடி அவ்வப்போது ஏலத்தில் விடப்படுகிறது. இம்முறை சுமார் 22 ஆயிரத்து 200 கிலோ அதாவது சுமார் 22 டன் தலைமுடி சேர்ந்த நிலையில் ஏலத்தில் விடப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளில் கோயில்கள் தற்போது மூடிக் கிடப்பதால் தலைமுடிக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் திருப்பதியில் அதிக தொகைக்கு இம்முறை தலைமுடி ஏலம் போனது. வழக்கமாக சுமார் 30 கோடிக்கு ஏலம் போகும் நிலையில், தற்போது 37 கோடி ரூபாய் அளவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.