புனித தொழுகைக்குத் தயாராகும் மெக்கா மசூதி : கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
Jul 28 2020 11:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்த ஆண்டு ஹஜ் புனித தொழுகைகள் தொடங்கயுள்ள நிலையில், மெக்காவில் உள்ள மசூதிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நவீன வரலாற்றிலேயே முதன் முறையாக உலக அளவில் உள்ள இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. இருப்பினும், சவுதி அரேபியாவில் வசிக்கும் ஆயிரம் பேர் மட்டுமே ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதில் 70 சதவிகிதம் பேர் அங்கு வசிக்கும் வெளிநாட்டினர் என்ற நிலையில், 30 சதவிகிதம் பேர் மருத்துவத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமே புனித தொழுகையில் பங்கேற்க முடியும். கொரோனா வைரஸ் நோய் பரவலைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சி எடுக்கும் மருத்துவர்களைக் கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நோய் தொற்று பரவுவதைத் தடுக்கும் விதத்தில் மசூதிகளுக்குள் கிருமி நீக்கம் செய்வது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.