கேரளாவில் கோயில்களில் 17-ம் தேதி முதல் தரிசிக்கலாம் : குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு அனுமதி இல்லை

Aug 12 2020 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் வரும் 17-ம் தேதி முதல், கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்‍தர்களுக்‍கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக கேரளாவில் கடந்த மார்ச் 22ம் தேதி முதல் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இரு வாரங்களுக்கு முன் சபரிமலை கோயில் தவிர, மற்ற கோயில்களில் வெளியே நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், மலையாள மாதம் 1-ம் தேதியான வரும் 17ம் தேதி முதல், சபரிமலையை தவிர மற்ற கோயில்களுக்குள் சென்று தரிசிக்க பக்தர்களுக்‍கு அனுமதி வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற திருவிதாங்கூர் தேவசம் போர்டு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 10 வயதுக்கு குறைவான குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு கோயில்களில் தரிசனம் செய்ய அனுமதி கிடையாது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00