தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிரதோஷ வழிபாடு - 6 மாதங்களுக்கு பின்னர் பக்தர்கள் தரிசனம்
Sep 16 2020 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சாவூர் பெரியகோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. 6 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் இப்பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்றனர். தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து கோயில்கள் அடைக்கப்பட்டன. இந்நிலையில், இம்மாதம் ஒன்றாம் தேதி முதல் கோயில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தஞ்சை பெரியக் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. ஆறு மாதங்களுக்கு பிறகு பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.