திருப்பதி பிரமோற்சவத்திற்காக தமிழகத்திலிருந்து பூக்கள் - திண்டுக்கல்லிருந்து நாள்தோறும் 10 நாட்களுக்கு ஒரு டன் பூக்களை அனுப்ப ஏற்பாடு
Sep 18 2020 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி பிரம்மோற்சவத்தையொட்டி திண்டுக்கல்லிலிருந்து நாள்தோறும் ஒரு டன் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்பதால் அப்போது திருப்பதியில் பிரம்மோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும். புரட்டாசி மாதம் நேற்று தொடங்கியதால் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு அங்கு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. இதற்கு தேவையான பூக்களை பழனியில் உள்ள புஷ்ப கைங்கர்ய சபை ஒவ்வொரு ஆண்டும் அனுப்பி வருகிறது. இந்த ஆண்டும் முதல் நாளாக நேற்று வாடமல்லி, செண்டுமல்லி, கேந்தி என வகை வகையான மலர்கள் டன் கணக்கில் லாரி மூலம் திருப்பதிக்கு அனுப்பப்பட்டது. பிரம்மோற்சவம் நடைபெறும் 10 நாட்களுக்கும் நாள்தோறும் 10 டன் அளவுக்கு இந்த பூக்கள் அனுப்பப்படுகின்றன. திண்டுக்கல் நிலக்கோட்டை மலர்ச்சந்தையிலிருந்து பூக்கள் வாங்கப்பட்டு திருப்பதிக்கு அனுப்பப்படுகிறது.