திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு - வேத மந்திரங்கள் முழங்க சக்கர ஸ்நானம்
Oct 24 2020 1:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழா, சக்கர ஸ்நானத்துடன் நிறைவுபெற்றது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி தொடங்கி, நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் உற்சவர் மலையப்பசுவாமி வீதி உலா நடைபெற்றது. இவ்விழா சக்கர ஸ்நானத்துடன் இன்று நிறைவடைந்தது.
கொரோனா கட்டுப்பாடு காரணமாக, திருக்குளத்தில் சக்கர ஸ்நானம் நடத்த அனுமதி இல்லாத நிலையில், திருக்குளத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர், கோயிலுக்குள் அமைக்கப்பட்ட தொட்டியில் நிரப்பப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க சக்கர ஸ்நானம் நடத்தப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி, சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவர்களுக்கு திருமஞ்சனம், தீபாராதனை மற்றும் நைவேத்தியம் ஆகியவை நடைபெற்றன.