கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில் ரூ.30 லட்சம் செலவில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது
Oct 31 2020 4:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி ஆலயத்தில், 80 ஆண்டுகளுக்கு பிறகு 30 லட்சம் ரூபாய் செலவில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருப்பதி தேவஸ்தான உறுப்பினரான பெங்களூருவை சேர்ந்த திரு.ரவி நாராயணன் - மகாதேவி தம்பதியினர், 30 லட்சம் செலவில், 3 டன் எடை கொண்ட புதிய கொடிக்கம்பம் செய்து வழங்கினர். கொடிக் கம்பத்திற்கு பூர்வாங்க பூஜைகள் செய்யப்பட்டு கிரேன் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது.