தேனி மாவட்டத்தில் தூய ஆவியானவர் தேவாலயம் : 142-ஆம் ஆண்டு சப்பர பவனி
Dec 3 2020 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியில் அமைந்துள்ள தூய ஆவியானவர் தேவாலயத்தில், 142ஆம் ஆண்டு சப்பர பவனி வெகுசிறப்பாக நடைபெற்றது. கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடந்த திருப்பலியை தொடர்ந்து, நேற்று சப்பர பவனி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று, மெழுகுவர்த்தி ஏந்தி, காணிக்கை செலுத்தினர். இன்று மாலை, கொடி இறக்கத்துடன், விழா நிறைவு பெறுகிறது.