பழனி தைப்பூச தேரோட்டத்தில் பங்கேற்கும் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா பரிசோதனைக்கே பிறகே அனுமதி - தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. தகவல்
Jan 24 2021 10:17AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பழனி தைப்பூச தேரோட்டத்தின்போது பணியில் ஈடுபடும் கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், காவல்துறையினர் என அனைவருமே கொரோனா பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள் என தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. திரு.முருகன் தெரிவித்துள்ளார்.
புகழ்பெற்ற பழனி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த விழா தொடர்பாக பழனியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தென்மண்டல காவல்துறை ஐ.ஜி. திரு.முருகன், விழாவின்போது மேற்கொள்ளப்படவிருக்கும் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் பற்றி விளக்கினார்.