ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் - கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி இஸ்லாமியர்கள் தொழுகை
May 14 2021 11:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டுவரும் நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்துமாறு மத்திய, மாநில அரசுகள் இஸ்லாமியர்களை கேட்டுக்கொண்டன. இதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி இஸ்லாமியர்கள் வீடுகளிலேயே சிறப்பு தொழுகை நடத்தினர். டெல்லியில் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், ஜமா மசூதியில் தொழுகை நடத்த அனுமதி அளிக்கப்படவில்லை. மசூதியை சுற்றி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தங்களின் கோரிக்கையை மக்கள் ஏற்றுக்கொண்டதாகவும், மசூதியில் தொழுகை நடத்த யாரும் வரவில்லை என்றும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பஞ்சாப் மாநிலம் அம்ரிஸ்டரில் உள்ள ஜமா மசூதியில் ஏராளமானோர் சிறப்பு தொழுகை நடத்தினர்.