ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு - கொரோனா தொற்று காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு
Jun 14 2021 12:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. கொரோனா காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் திருவிழா நாட்கள் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. நாளை நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷபூஜை, உச்ச பூஜை, படி பூஜை, சிறப்பு தீபாராதணை ஆகியவை நடைபெறும். வரும் 19-ம் தேதி இரவு 8 மணியளவில் கோவில் நடை அடைக்கப்படும். இதனிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சபரிமலை நடைதிறப்பில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.