கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம் திறக்கப்படவில்லை
Jun 16 2021 12:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்பகோணம் தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம் இன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடர்வதால் இன்று திறக்கப்படவில்லை. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 16-ம் தேதி மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயம் மூடப்பட்டது. இன்று இவ்வாலயம் திறக்கப்படும் என மத்திய தொல்லியல் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.