கோவில்களில் அர்ச்சனைக்கு அனுமதி வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு தேங்காய், பூ, பழ வியாபாரிகள் கோரிக்கை
Jul 30 2021 4:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆடி வெள்ளிக்கிழமையான இன்று ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் அர்ச்சனை செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் தேங்காய், பழம், பூ, வியாபாரிகள் வியாபாரம் இன்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கோவில்களில் அர்ச்சனை செய்ய தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.