நாகை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழா நிறைவு - பக்தர்கள் இன்றி நடைபெற்ற கொடியிறக்கம் நிகழ்ச்சி
Sep 9 2021 12:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகப் பிரசித்தி பெற்ற நாகை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய பெருவிழா நிறைவு பெற்றது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8-ம் தேதி வரை 10 நாட்கள் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, விழாவின் நிறைவு நாளான நேற்று அன்னையின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர், பங்கு தந்தை அற்புதராஜ் தலைமையில், நன்றி அறிவிப்பு ஜெபம் செய்து கொடி இறக்கப்பட்டது. பேராலயத்தில் மாதா மன்றாட்டு திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பும் நடைபெற்றது.