கொரோனா அச்சம் காரணமாக விநாயகர் சதுர்த்தியன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் ஆலயத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
Sep 9 2021 7:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா அச்சம் காரணமாக, விநாயகர் சதுர்த்தியன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் ஆலயத்தில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால், இன்றே ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத்தலங்கள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில், பொதுமக்கள் வீட்டிலேயே வழிபாடு நடத்தவும், ஊர்வலங்களுக்கு தடை விதித்தும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி ஆலயத்தில் உள்ள மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு, 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை நெய்வேத்தியம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், நாளைய தினம் வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், கோவில் பணியாளர்களைக்கொண்டு கொழுக்கட்டை படையல் செய்யப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இன்றைய தினமே ஏராளமான பக்தர்கள் மலைக்கோட்டைக்கு வருகை தந்து விநாயகரை வழிபட்டு சென்றனர்.