திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில் நடைபெற்ற சதுர்த்தி விழா - மாணிக்க விநாயகருக்கு 60 கிலோ எடை கொழுக்கட்டை படையலிட்டு வழிபாடு
Sep 10 2021 12:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புகழ் பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. மாணிக்க விநாயகருக்கு 60 கிலோ எடையுள்ள கொழுக்கட்டைகள் படையலிட்டு விழிபாடு நடைபெற்றது.
தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் உச்சிப்பிள்ளையர் கோவிலில் இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு விநாயகருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாணிக்க விநாயகர் மற்றும் உச்சிப்பிள்ளையாருக்கு பச்சரிசி, உருண்டை வெல்லம், எள், ஏலக்காய் மற்றும் சாதிக்காய், நெய், தேங்காய் போன்றவற்றை கொண்டு தலா 30 கிலோ கொண்ட இரண்டு கொழுக்கட்டைகள் 60 கிலோ எடையுடன் தயார் செய்யப்பட்டன. மேளதாளங்கள் முழங்க கொழுக்கட்டைகள் தொட்டிலில் எடுத்து வரப்பட்டு விநாயகருக்கு படைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.