திருப்பதி பிரம்மோற்சவம் - பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என அறிவிப்பு
Sep 17 2021 1:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா 3-வது அலை அச்சுறுத்தல் காரணமாக திருப்பதி பிரம்மோற்சவம், பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் திருமலை திருப்பதியில் புரட்டாசி மாதம் 10 நாட்கள் உற்சவமாக பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டு பிரம்மோற்சவம் பக்தர்கள் இன்றி நடைபெறும் என்றும், சுவாமி வீதி உலா, கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாகவும் அறங்காவலர் குழு அறிவித்துள்ளது.