மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் கோவில் உண்டியலில் பக்தர்கள் ரூ.23 லட்சம் காணிக்கை
Oct 19 2021 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் ஆவணி- புரட்டாசி மாதத்திற்கான உண்டியல் காணிக்கையாக 23லட்சத்து 38 ஆயிரத்து 636 ரூபாய் பணம், 430 கிராம் தங்கம் மற்றும் 3 கிலோ வெள்ளி கிடைக்கப்பெற்றது. கடந்த ஆவணி- புரட்டாசி மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த பணத்தை கோயில் துணை ஆணையர் ராமசாமி, கண்காணிப்பாளர் லெட்சுமி மாலா ஆகியோர் முன்னிலையில் ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள், ஐய்யப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஆகியோர் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.