நெல்லை: காந்திமதி அம்பாள் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற கொடியேற்றம்
Oct 22 2021 7:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருநெல்வேலி மாவட்டத்தில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி மாத திருவிழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். நெல்லை காந்திமதி அம்பாள் திருக்கோயிலில், ஐப்பசி மாத திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழாவையொட்டி, கோயில் கொடிமரத்துக்கு பல்வேறு அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
திருக்கல்யாணத் திருவிழா முடிந்து 3 நாட்கள் ஊஞ்சல் வைபவமும், நிறைவாக சுவாமி-அம்பாள் மறுவீடு பட்டினப்பிரவேசமும் நடைபெற உள்ளது.