ராமநாதசுவாமி கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் தெப்ப உற்சவம் - கோயில் வளாகத்தில் உள்ள சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி
Jan 17 2022 3:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, கோயில் வளாகத்தில் உள்ள சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி தெப்பத்திருவிழா நடைபெற்றது. கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுவாமி, அம்பாள் தெப்பத்தை சுற்றி வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, திருக்கோயிலில் சுவாமி - அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன், சிவதீர்த்த பகுதியில் எழுந்தருளினர். இதைத்தொடர்ந்து அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர், சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன், நந்திகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுடன், 3-ம் பிரகாரத்தில் உலா வந்தனர். இதன் பின்னர் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.