தைப்பூசத்தை ஒட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 3 நாள் தெப்பத் திருவிழா
Jan 18 2022 1:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூச சிறப்பு வழிபாடு இன்று நடைபெற்றது. முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 3 நாள் தெப்பத்திருவிழா நேற்று முன் தினம் தொடங்கியது. கொரோனா தொற்று காரணமாக நேற்று மாலை தெப்பத் திருவிழா, பக்தர்கள் யாருமின்றி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கபாலீஸ்வரர் கோயிலில் தைப்பூச சிறப்பு வழிபாடு இன்று நடைபெற்றது. முருகனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்விலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.