வடலூரில் தைப்பூசத் திருவிழா - 2-வது நாளாக ஜோதி தரிசனம் : கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் தரிசனம்
Jan 19 2022 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம், வடலூரில், தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, ஜோதி தரிசன விழா கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள்படி 2-வது நாளாக இன்று நடைபெற்றது.
வடலூரில் ஜோதி தரிசனப் பெருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இங்கு தைப்பூச திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 151-ம் ஆண்டு ஜோதி தரிசன விழா, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி நடைபெற்றது. நேற்று காலை 6 மணிக்கு, முதல் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. பின்னர் இரவு வரை 4 முறை ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஜோதி தரிசனம் நடைபெற்றது. 7 திரைகள் அடுத்தடுத்து நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. அங்கு குவிந்திருந்த பக்தர்கள், மகா மந்திரத்தை முழங்கியபடி ஜோதி தரிசனம் செய்தனர்.