திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
Jan 20 2022 2:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பொங்கல் பண்டிகை முதல் தைப்பூச திருவிழா வரை முக்கிய ஆலயங்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் திருச்செந்தூருக்கு அலகு குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வந்திருந்த பக்தர்கள், தரிசனம் செய்ய முடியாத நிலையி ஏற்பட்டது. இதனால் அவர்கள் கடந்த 5 நாட்களாக திருச்செந்தூர் கோவில் அருகிலேயே தங்கியிருந்தனர். நேற்று தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், 2வது நாளாக இன்றும் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.