திருச்சி ஸ்ரீரங்கம் வடக்குவாசல் தசாவதார சன்னதி பிருந்தாவனத்தின் மகா கும்பாபிஷேகம் : அகோபில மடத்தின் 46-வது ஜீயர் ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் பங்கேற்பு
May 26 2022 4:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்குவாசல் தசாவதார சன்னதியில் உள்ள பிருந்தாவனத்தின் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் அகோபில மடத்தின் 46-வது ஜீயர் ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் கலந்துகொண்டார்.
அகோபில மடத்தின் 46வது ஜீயர் ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் என்கிற, ஸ்ரீமத் அழகிய சிங்கர் சுவாமிகள் தலைமையில், ஸ்ரீரங்கம் வடக்கு வாசல் தசாவதார சன்னதியில் உள்ள நித்ய ஆராதனை மூர்த்தியான மாலோல நரசிம்மர் சுவாமிகளுடன் கூடிய பிருந்தாவனத்தின் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீரங்கநாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் முன்னிலையில் யாகசாலை நடைபெற்று, புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, வேத பாராயணங்கள் முழங்க, புனிதநீர் கோபுர கலசத்தில் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.